Dec 17, 2008

ரெக்கை கட்டி பறக்குதய்யா அம்மாவோட சைக்கிள்





என்ன அத்தை மாமா
எப்டி இருக்கு என் சைக்கிள்......சூப்பர் இல்ல....இதுல தான் இப்போ நான் கடைக்கு போறேன்...தனம் ஆச்சி வீட்டுக்கு போறேன்......என் பெட் ரூம்-ல இருந்து சாப்பிட பின்னாடி போகனும்னா கூட நான் இப்போ எல்லாம் சைக்கிள்ல தான் போறேன்...ஆமா பின்ன பெரிய புள்ளயா ஆயிட்டோம்ல.....நமக்குன்னு பொறுப்பு வந்துருச்சு.....இப்போவும் ஜெயா அம்மாவும் ஆச்சி அம்மாவும் தூக்கிட்டே போகனும்னு எதிர் பார்க்கலாமா? தப்பு தப்பு....I'm on my own now.....he ஹி


எல்லாம் இருக்கட்டும் ...சைக்கிள் யார் வங்கி குடுத்தான்னு கேக்கவே இல்லியே....
உடனே...சொல்லவே இல்லையே -நு இழுக்க கூடாது .....நம்ம சய்ச் (சதீஷ்) மாமா தான் வங்கி குடுத்தான் ...(குடுத்தாங்க )
பின்னாடி பார்த்தீங்களா...என்னோட பொம்மை எல்லாம் கூட வச்சுக்கலாம் ...


ஹ்ம்ம்......இல்ல இல்ல...உங்கள மாதிரி பெரிய பிள்ளைங்க எல்லாம் உக்கார முடியாது.....ஆமா...உடைஞ்சு போயிரும்.....
உங்க அப்பா கிட்ட சொல்லி உங்க வெயிட் தங்குற மாதிரி பெரிய சைக்கிள்-லா வாங்கிக்கோங்க....சரியா......

ஹ்ம்ம்....அழ கூடாது மாமா...அச்சோ....என்ன இது சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு .....ச்சே ..ச்சே ,...ஐயோ பார்க்க பாவமா இருக்கு
சரி ...சும்மா சைக்கிள் தொட்டு பார்த்துக்கோங்க.....பிடிச்சுகிட்டு கூடவே நடந்து வரறீங்களா?..........ஹ்ம்ம்...சரி....கொஞ்ச தூரம் மட்டும்..சரியா.....


5 நிமிடங்கள் கழித்து ...
மாமா...போதும்...என் சைக்கிள் விடு......நீ அங்க இங்கன்னு எல்லாத்தையும் நோண்டுற.....போ....இனிமே என் சைக்கிள் தர மாட்டேன்......[ முகத்தில் சப்-நு ஒரு அடி விழும் சத்தம் ]

Dec 4, 2008

கதை சொல்ல போறேன்


என்ன கதை சொல்ல போறேன்? எங்கம்மா எனக்கு எப்பவும் சொல்ற கதை சொல்ல போறேன்.


ஒரு ஊர்ல ஒரு ராஜாராணி இருந்தாங்களாம். அந்த ராஜா ராணிக்கு குட்டி பாப்பான்னா ரொம்ப பிடிக்குமாம். அதுனால அவங்க ரெண்டு பேரும் சாமி கிட்ட போயி சாமி சாமி எங்களுக்கு எப்போவும் சிரிச்சுக்கிட்டே இருக்குற ஒரு அழகான பாப்பா வேணும்னு வரம் கேட்டாங்களாம்.


சாமி .......ஆஹா இவங்கள பார்த்தா ரொம்ப நல்லவங்களா தெரியுதே. இவங்க கேட்ட வரத்தை இவங்களுக்கு குடுத்துருவோம். ஆனா எப்போவும் சிரிச்சுக்கிட்டே இருக்குற மாதிரின்னா எப்படி ? அப்டின்னு யோசிச்சுக்கிட்டே சாமி மேல பார்த்தாராம். அப்போ வானத்துல நிலா அழகா சிரிச்சுகிட்டு இருந்துச்சாம்.

உடனே சாமி ...ஹ்ம்ம்.. எனக்கு தெரிஞ்சு போச்சு ...இந்த ராஜா ராணிக்கு நான் இந்த அழகான நிலவு மாதிரி ஒரு அழகான குட்டி பாப்பா தர போறேன்னு முடிவு செஞ்சாராம்.
அப்புறம் அந்த ராஜா ராணிக்கு கொஞ்ச நாள்ல ஒரு நிலா....இல்ல இல்ல ..ஒரு பாப்பா பிறந்துச்சாம்.

அப்படி பிறந்ததுனால தான் எனக்கு நிலா-ன்னு பேர் வச்சாங்களாம்.

அப்பா இப்போவும் சொல்லுவாங்க..நான் ரெண்டு மாச பாப்பாவா இருக்கும் போதே அப்பா பார்த்து நல்லா பொக்கை வாய் தெரிய சிரிப்பேனாம்.

இது தான் எங்க அரச குடும்ப புகைப்படம்

எப்டி இருக்கு என்னோட பிறந்த புராணம் ?