Apr 4, 2009

வரையலாம் வாங்க - பாகம் 1


எனக்கு கொஞ்ச நாளா எழுதுறதுக்கு ஒரு விஷயமும் கிடைக்கல...அப்டியே ஏதாவது யோசிச்சு எழுதினாலும் ஒரு நாலு பாசக்கார மாமாக்கள் மட்டுமே வர்றாங்களே தவிர, எந்த அக்காவும் , தம்பியும் என்னைக் கண்டுக்கறதே இல்லை.. அதுனால தான் இந்த முயற்சி....

எங்கம்மாவுக்கே ஓவியம் சொல்லிக் கொடுத்தது நான் தான்...சரி எனக்கு தெரிஞ்ச திறமை அழிஞ்சு போகக் கூடாதேன்னு உங்களுக்கு சொல்லித் தர வந்தேன்...

சரி பாடத்துக்கு போவோமா...எல்லாரும் பென்சில் , பேப்பர் எடுத்துக்கோங்க...அழி ரப்பர் யாரும் தொடக் கூடாது..அழிக்காம வரைய கத்துக்கணும்....யாராவது ரப்பர் வச்சுருக்குறது பார்த்தேன், அப்புறம் அடிஸ்கேல் வச்சு கைல ..அடிப்பேன்

முதல்ல, இது மாதிரி வரைங்க...ரெண்டு கோடு உயரவாக்குல போட்டுகோங்க..அப்புறம் அதுல இருந்து நாலு கிளை வரையனும்....



போட்டாச்சா?பரவா இல்லியே..சொன்ன உடனே கற்பூரம் மாதிரி பிடிச்சுக்கிட்டேங்களே..

ஜமால் மாமா, கைல என்ன? ரப்பர் தானே...அப்பவே என்ன சொன்னேன்....அழிச்சு அழிச்சு பேப்பர் எல்லாம் ஒரே கரி ..ரெண்டு கோடு போடுறதுக்குள்ளே இப்படியா..ஐயோ ஐயோ ..

சரி இப்போ மரத்தோட கிளை எல்லாம் போட்டாச்சு..அடுத்து என்ன போடணும்?ஆதவா மாமா நீ சொல்லுங்க...
ஆதவா : நிலா பாப்பா கிளி போடனும்.. :
நிலா : மக்கு மக்கு....கிளை போட்டப்புறம் தான் இலை போடணும்.இலை இல்லாத மரத்துல இலவு காக்க கிளி கூட வராது...வவ்வால் தான் வரும்...
ஆதவா : அவ்வவவ் .....


எல்லாரும் குட்டி குட்டி மேகம் வரையுற மாதிரி இலைக் கொத்து போடுங்க பார்ப்போம் ..


ராசுக்குட்டி மாமா அழகா போட்டு இருக்கீங்களே..ஆதவ் பாப்பாக்கு இத சொல்லித் தரனும் சரியா ..

சரி அவ்ளோ தான்...வரஞ்சு முடிச்சாச்சு ..இனிமே வர்ணம் தீட்டனும்...வர்ணம் ஒழுங்கா கலைஞ்சு படம் முழுசும் பரவணும்னா, எந்த இடத்துல வர்ணம் தீட்ட போறீங்களோ, அந்த இடத்துல முதல்ல வெறும் பிரஷ்ல தண்ணி வச்சு தடவனும்..தண்ணி இருக்குற இடத்துல இப்போ வர்ணத்தை வச்சோம்னா , அழகா ஒரே சீரா பரவும்.வெளிறிய நிறங்களை முதல்ல போடுங்க....அது காய முன்னாடி அதை விட சற்று அடர்ந்த நிறத்தை ஓரத்தில இருந்து பரப்ப ஆரம்பிங்க




எங்க எல்லாரும் காட்டுங்க ..
நசரேயன் உள்ளே நுழைகிறார் ..

நிலா : ஏன் மாமா, கல்லூரி வரைக்கும் எல்லா வகுப்புக்கும் லேட்டா தான் போனீங்க...இப்போவும் இப்டியா...கடவுளே...பெருமாளே ..அய்யப்பா

நிலா : இந்த வகுப்பு முடியுற வரைக்கும் முட்டி போடுங்க ...


நசரேயன் ஏண்டா வந்தோம்னு தலைல அடிச்சுக்கிட்டு முட்டி போட்டு தலை குனிஞ்சு நிக்குறார்


ஜமால் மாமா எங்க காட்டுங்க பார்ப்போம்...அடக் கடவுளே இன்னும் முதல்ல போட சொன்ன ரெண்டு நெட்டு கோடு போடலியா ...
வேத்தியன் மாமா , நல்லா இருக்கு..நான் வரைய சொன்னது மரம்...நீங்க வரஞ்சுருக்குறது என்னதுன்னே எனக்கு தெரியல ..
மத்த எல்லாரும் நல்லா பண்ணிருக்கீங்க..

சரி...இப்போ மரம் வரஞ்சாச்சு ..தனிக் காட்டு மரமா வேணும்னா இப்டியே விட்ரலாம்..இல்லை, நம்ம பதிவர் உலகம் மாதிரி ஒரு அழகான சோலை உருவாக்கனும்னா எல்லாரும் அப்டியே அவங்க அவங்க இடத்துல உக்கார்ந்து நான் பண்றதை பாருங்க.....

வானம் போட்டு, மேகம் போட்டு, அதுல ரெண்டு கிளி போட்டு ....[ யார் அது என் கிளியை காக்கான்னு சொல்றது ..அடிப்பேன் ][தேவா பம்முகிறார் ]
மின் முகம் விஜய்.: நிலா பாப்பா இன்னும் என்ன எல்லாம் போடப் போற?...ஆத்தா வையும் வீட்டுக்கு போனும்...சீக்கிரம் முடி...
நிலா : விஜய் மாமா.. நான் நெட்டுக்கா அடிஸ்கேல் இல்லாம கோடு போடுற வரைக்கும் 100 தடவை போட சொன்னேனே..போட்டீங்களா ...?

மின்முகம் விஜய் வாயை ஸிப்பிடுவது தெரிகிறது
அப்புறம் கீழ மண்ணு போடனும்னா மண்ணு, புல்லு போடனும்னா புல்லு..
இவ்ளோ தான்...முடிஞ்சு போச்ச்சு


எல்லாரும் அடுத்த வகுப்புக்கு வரும் போது இதை முடிச்சுட்டு வரணும் ....சரியா ?
அடுத்த வகுப்புக்கு வரும் போது , எல்லாரும் அரை கால் டவுசர் போட்டு வாங்க...அப்போ தான் முட்டில அடிக்க வசதியா இருக்கும்...

வர்ர்ட்டா


உங்கள் அன்பு [!] நிலா