Feb 25, 2009

என்னை கவர்ந்த ஆத்மா -தொடர் பதிவு



அநியாயம் அநியாயம்

பொன்னாத்தா என்னை தொடர் பதிவு போட சொல்லி ஒரு வாரத்துக்கும் மேல ஆகுது....நான் தயாரா தான் இருந்தேன். ஆனா என்னை கவர்ந்த ஆத்மா யாருன்னு நான் அறிக்கை வெளியிட்டதும் பொன்னாத்தா ஒத்துழைப்பு குடுக்க மறுத்துட்டாங்க.

பதிவு படிச்சு முடிச்சுட்டு நீங்களே ஒரு பஞ்சாயத்து வைங்க.
என்னை தொடர் பதிவுல இழுத்ததுக்கு காரணமே என்னை பெத்த ஆத்தாவுக்கு நான் அவீகள தான் சொல்லுவேன்னு நினைப்பு..


ஹ்ம்ம்...நான் உலகத்துல எம்புட்டு பேரை சந்திக்குறேன்..பேசுறேன்...பழகுறேன்...என்னை கேக்காம எப்டி முடிவு செய்யலாம்.

சரி பொன்னாத்தாவை அப்புறம் சமாளிச்சுக்கலாம்.

எனக்கு நிறைய பேரை பிடிக்கும்....பொன்னத்தாவையும் பிடிக்கும். அப்புறம் அப்பா, ஜெயாம்மா, ஐஷு, அணு, எல்லா தாத்தாவும், எல்லா ஆச்சியும்....

இருந்தாலும் எனக்கு எங்க ஆச்சியம்மன்னா உசிரு....ஆச்சியம்மா யாருன்னா பொன்னத்தாவோட அம்மா.
நான் முதல்ல ஆச்சியம்மவை நான் 4 மாச குழந்தையா இருக்கும் பொது தான் பார்த்தேன்...அப்போ இருந்து இப்போ வரைக்கும் நாங்க ரெண்டு பெரும் பிரிஞ்சதே இல்ல.....


ஆச்சியம்மவை பார்த்த அதிசயமா இருக்கும்...எப்போ பார்த்தாலும் வேலை செஞ்சுட்டே இருப்பாங்க.....பொன்னாத்தா கூட இருந்தாலும் சரி ஜெயா அம்மா [பொன்னத்தாவோட அக்கா] கூட இருந்தாலும் சரி ..எல்லா வேலையும் ஆச்சியம்மா தான் பார்ப்பாங்க...சனி ஞாயிறுல கூட பொன்னாத்தா 8 மணிக்கு எழுந்து வரும் பொது ஆச்சியம்ம்மா என்னமோ பொன்னாத்தா 5 வயசு பிள்ளை மாதிரி ரெடியா தேநீர் போட்டு வச்சுருப்பாங்க ....எனக்குன்னா கோபம் கோபமா வரும்.

வீட்ல வேலைக்காரி வர்றதே பெரிய விஷயம்...வேலைக்காரி பாவமேன்னு அவங்க வர முன்னாடி இவங்க எல்லா வேலையும் முடிச்சு வச்சுட்டு வேலைக்கார அக்காக்கு சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கும்

இவ்ளோ பண்ற ஆச்சியம்மாக்கு சோர்வே இருக்காதா.....பொன்னாத்தா கூட சொல்லும்...மத்தியானம் இந்த அகராதி புடிச்சவ துங்கும் பொது நீங்களும் துங்கலாம்லன்னு ....ஒரு நாளும் தூங்க மாட்டாங்க

ஆச்சியம்மாக்குன்னு எந்த ஒரு தனிப்பட்ட ஆசை கிடையாது....பொன்னாத்தா இந்த அளவுக்கு தைரியமா ஊர் சுத்துது,[ ரொம்பவே] நிறைய படிச்சுருக்கு [ என்னமோ அது தான் சொல்லுது] ..அப்டி இப்டின்னு இன்னும் சில பல திறமைகளை வளத்துருக்குன்னா அதுக்கேல்லாமே ஆச்சியம்மா குடுத்த ஊக்கம் தானாம்.

எல்லாரும் நான் ரொம்ப செட்டை செய்யுறேன்னு சொன்னாலும் ஆச்சியம்மா மட்டும் என்னை வய்யவே வைய்யாது....சில நேரம் என்னை வஞ்சதுக்காக பொன்னாத்தா வாங்கி கட்டிக்கும்..

இன்னும் கொஞ்ச நான் கழிச்சு நான் குழந்தைகள் காப்பகத்துக்கு போகட்டும்னு சொன்னா நான் அழுறேனோ இல்லியோ ஆச்சியம்மா கண்ணுல தண்ணி பார்க்கலாம்...

இப்டி இருக்குற ஆச்சியம்மவை விட வேற யாரை எனக்கு பிடிக்கும் சொல்லுங்க?

நான் தினமும் சாமி கும்பிடும் பொது சொல்றது.....ஆமி....மாயம்ம்மா .....ஐய்யப்பா ..

என்ன அர்த்தம்னு புரியலியா?...சாமியே...ஆத்தா மாரியாத்தா, அங்காள பரமேஸ்வரி ...அய்யப்பா சாமியே... எப்போவும் எங்க ஆச்சியம்மா என் கூடவே இருக்கணும்....எனக்கு புது சட்டை, மிட்டாய் எல்லாம் வேண்டாம்...ஆச்சியம்மா தான் வேணும்

நான் ஊரெல்லாம் சுத்தினாலும் ராத்திரி ஆச்சியம்மா பக்கத்துல படுத்தா தான் துங்குவேன்னு சொல்லுவேன்...எதுக்கு தெரியுமா...அப்படியாவது ஆச்சியம்மா கொஞ்சம் களைப்பாருவங்களேன்னு தான்.

சரி என் பட்டியல்ல இருக்குற இன்னும் கொஞ்ச பேர்.

அப்பா.- ஐயோ அப்பான்னாலே ஆசை தான்...அப்பா என்னை கூப்பிடுரதே அம்புட்டு அழகா இருக்கும்/..அப்பா கூட விளையாட எனக்கு கொள்ளை ஆசை.

ஐஷு - என்னோட அக்கா...இவளும் என்னை மாதிரி வாயாடி....கொஞ்சம் களிமண் குடுத்தா அம்புட்டு அழ்கா பொம்மைகள் செஞ்சுடுவா

அணு- என்னோட பெரிய அக்கா - எல்லார் கிட்டயும் சமத்துன்னு பேரு வாங்கி ஐஷூக்கு அடி வாங்கி குடுப்பா. வீணை வாசிச்சுட்டே இருந்தான்னா நான் கேட்டுட்டே இருப்பேன்

இன்னும் நிறைய இருக்கு...அதுக்கு தனி பதிவு போடுறேன்....

நான் இங்கே தொடர அழைப்பது பப்புக்கு புடிச்ச மனுஷங்களை பற்றி சொல்ல
முல்லை அத்தையை.....அத்தை நீங்களும் பொன்னாத்தா மாதிரி முரண்டு பிடிக்க கூடாது....

அன்பு முத்தங்களுடன்
உங்கள் நிலா

15 comments:

  1. //
    இவ்ளோ பண்ற ஆச்சியம்மாக்கு சோர்வே இருக்காதா.....பொன்னாத்தா கூட சொல்லும்...மத்தியானம் இந்த அகராதி புடிச்சவ துங்கும் பொது நீங்களும் துங்கலாம்லன்னு ....ஒரு நாளும் தூங்க மாட்டாங்க
    //

    ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க நிலா.

    Super ஆச்சியம்மா கிடைச்சு இருக்காங்க
    எனக்கு கொஞ்சம் ஆச்சியம்மாவை
    அனுப்பி வைக்க முடியுமா???

    ReplyDelete
  2. //
    இன்னும் நிறைய இருக்கு...அதுக்கு தனி பதிவு போடுறேன்.
    //

    சீக்கிரம் போடுங்க படிக்க ரொம்ப
    ஆவலா இருக்கோம்.

    ReplyDelete
  3. ன்ன அர்த்தம்னு புரியலியா?...சாமியே...ஆத்தா மாரியாத்தா, அங்காள பரமேஸ்வரி ...அய்யப்பா சாமியே... எப்போவும் எங்க ஆச்சியம்மா என் கூடவே இருக்கணும்....எனக்கு புது சட்டை, மிட்டாய் எல்லாம் வேண்டாம்...ஆச்சியம்மா தான் வேணும்
    ///

    இதுதான் அன்பின் உன்னதம்!!1

    ReplyDelete
  4. இப்படி நபர்களை பார்ப்பதே அபூர்வம்!!

    ReplyDelete
  5. ஆச்சியம்மாக்குன்னு எந்த ஒரு தனிப்பட்ட ஆசை கிடையாது....பொன்னாத்தா இந்த அளவுக்கு தைரியமா ஊர் சுத்துது,[ ரொம்பவே] நிறைய படிச்சுருக்கு [ என்னமோ அது தான் சொல்லுது] ..அப்டி இப்டின்னு இன்னும் சில பல திறமைகளை வளத்துருக்குன்னா அதுக்கேல்லாமே ஆச்சியம்மா குடுத்த ஊக்கம் தானாம்.//

    நிலா!
    அப்படியெல்லாம்
    பொன்னாத்தவை
    சுத்த விடாத! சரியா?
    நான் சொன்னேன்னு
    பொன்னாத்தாகிட்டே
    சொல்லிடாதே!
    சரியா?

    ReplyDelete
  6. ரம்யா அத்தை ..கொஞ்சம் பொன்னாத்தா கிட்ட எனக்காக சிபாரிசு பன்றேங்களா?....எனக்காக தினம் ஒரு பதிவு தட்டச்சு பண்ணித் தர சொல்லி.......பீஸ்..பீஸ்.... [ please]




    என் ஆச்சியம்மா....நான் யாருக்கும் குடுக்க மாட்டேன்..இஸ்கு புஸ்கு
    ...இப்டி தான் ஐஷும் தினமும் அவ ஆச்சியம்மன்னு சொல்றா...---------------------------


    தேவா மாமா....பொன்னாத்தா யார் சொன்னாலும் கேக்காது...அப்பாக்கு மட்டும் தான் கொஞ்சோண்டு பயம்......மாமா...பீஸ் பீஸ்...நான் சொன்னேன்னு சொல்லீடாதீங்க

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. எழுது நடையும், கடிதமும் ரெம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  9. ஆஹா..எவ்வளவு அழகான பதிவு! ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..உங்க ஆச்சியம்மா-வுக்கு எங்கள் அன்பு!

    ReplyDelete
  10. கண்டிப்பா சீக்கிரம் எழுதறேன் நிலாக் குட்டி!

    ReplyDelete
  11. நிலா அம்மா என்னை
    எங்கே அழைச்சி இருக்கீங்க
    எந்த பதிவு, வந்து வந்து பாத்துட்டு
    ஒண்ணுமே புரியலையே
    ப்ளீஸ் பா எங்கேன்னு சொல்லுங்க பா!!

    ReplyDelete
  12. Hi madam,

    நலம் நலமறிய ஆவல்

    http://www.valpaiyan.blogspot.com/
    ============================

    இந்த லிங்க்லே இன்னைக்கு என்னோட interview
    முடிந்தால் படிங்க.


    அன்புடன்
    ரம்யா

    ReplyDelete
  13. ஹாய் நிலாவும் அம்மாவும்,

    போட்டுட்டேன்..பதிவு...http://sandanamullai.blogspot.com/2009/03/blog-post_05.html.

    நன்றி!

    ReplyDelete

முத்தமும், கொஞ்சலும்